இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை
இதோ தூண்கள் ரெடி ... யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? நாங்கள் சொன்ன இடத்தில் கோயில் கட்டியேதீருவோம். இதில் குறுக்கிட நீதிமன்றத்திற்கு என்ன உரிமை இருக்கிறது.? பா.ஜ.க. அரசு கவிழ்ந்தால் கவிழட்டுமே?கோயில் கட்டுமானப் பணி இன்ன தேதியில் தொடங்கும். கட்டியே தீருவோம் என்றெல்லாம் வி.எச் பி., பஜ்ரங் தள்போன்ற அமைப்புகளின் தலைவர்கள் சவால் மழை பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதன் காரணமாக எழக்கூடிய துவேஷ வெள்ளத்தில், நாட்டின் அமைதி அடித்துக் கொண்டு போய் விடுமே என்றகவலை யாருக்குமே எழக் காணோம். இவர்களிடம் பேசி, நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையிலாவது அயோத்திபற்றி எதுவும் கூறுவதில்லை என்ற கருத்தை உருவாக்க, பாரதிய ஜனதா முயற்சி செய்யலாமே!
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடியும்: ஹிந்துக்களின் பிரதிநிதிகளும்,முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
ஆனால் பா.ஜ.க.,வினால் இந்த ஹிந்து அமைப்புகளிடம் பேசி, அயோத்தி சவால்களை நீதிமன்றத் தீர்ப்புவரும்வரை தள்ளிப்போட முடியாதா? அது அல்லவா இப்போது உடனடியாக நடக்க வேண்டிய பேச்சு வார்த்தை!
சவால்கள் குவிந்து கொண்டே போனால், எதிர் தரப்பிலிருந்து பதில் சவால்களும் வளரும். இந்த ஒரு கட்டத்தில்,இரு தரப்பினருக்கும் கவுரவப் பிரச்னையாகி விடும்.
அதற்குப் பிறகு கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், அது கோழைத்தனமான பின் வாங்குதல் ஆகி விடும் என்றுநினைத்து, இரு தரப்பினரும் வறட்டுத் தனத்தை வளர்த்துக் கொள்வார்கள். பிடிவாதங்கள், மூர்க்கத்தனங்களாகமாறிவிடும். ஆகையால் இப்போதே இந்த அயோத்தி சவால்களைத் தவிர்ப்பது நல்லது.
பா.ஜ.க. தலைமை - தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்,.ஸின் உதவியோடு - அயோத்தி விவகாரத்தில் முனைந்துள்ளஹிந்து அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அந்தப் பேச்சு வார்த்தை மூலம், கோயில் கட்டுகிற பணி துவங்குகிற தேதி அறிவிப்புகளுக்கு ஒரு நிறுத்தத்தைப்பெற வேண்டும்; தவிர, தூண்கள், மாடங்கள், விக்ரஹங்கள் போன்றவை கொண்டு வந்து குவிக்கப்படுவதைத்தடுக்கவும், அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் வழி காண வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையில்,அயோத்தி பிரச்னை மேலும் உக்கிரமடைந்து விடாமல், அந்தப் பேச்சு வார்த்தைகளின் மூலம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படிச் செய்தால் நாட்டின் அமைதி குலையாமல் காப்பாற்றப்படும்: : பெரும் குழப்பம் விளைந்து விடாமல்தடுக்கப்படும்; மத்திய அரசுக்கு இருந்து வரும் ஒரு பெரும் தொல்லை தீரூம். இந்த முக்கோண நன்மையைஉடனடியாக காண, பா.ஜ.க. தலைமை முனைய வேண்டும்.