For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
Google Oneindia Tamil News

அயோத்தி பிரச்சனை மீண்டும் பெரிதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னையின் அடிப்படையைஎடுத்துக் கொண்டால் - ஒரு கோயில் கட்டுவது என்பது ஓர் அரசியில் கட்சியின் திட்டமாக இருப்பது சற்றும்பொருத்தமல்ல.

இந்த திட்டத்தை பா.ஜ.க. என்றோ கை விட்டிருக்க வேண்டும். உத்திரபிரதேச தேர்தல் வரும்போது, அயோத்திபிடிவாதம் நல்ல பிரச்சாரமாக அமையும் என்று பா.ஜ.க. கணக்கிடலாம். ஆனால், இது மத்திய ஆட்சிக்கு ஆபத்துஏற்படுத்தக் கூடியது; அது மட்டுமல்ல, தேசத்தின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது.

பிரதமர் கேரளத்தில் ஓய்வெடுத்த போது, எழுதிய இரு கட்டுரைகள் பல பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதில்ஒரு கட்டுரையில் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது ஏற்கப்படும்; இரு மதங்களின் பிரதிநிதிகளின்இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்படுவது மற்றொரு வழி.

இதில் ஒரு வழி, மற்றொரு வழியை தடுப்பது அல்ல; இந்த இரண்டு வழிகளும் ஒன்றுக்கொன்று உதவக் கூடியவை;நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி - அது சீராக அமல்படுத்துவதற்கு , அமைதியான சமூக சூழ்நிலைவேண்டும். பேச்சு வார்த்தையின் மூலம் இதை உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். இது முற்றிலும்ஏற்கத்தக்க கருத்து.

இதையடுத்து, முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஒருவரும், பஜ்ரங் தள் தரப்பிலிருந்து ஒருவரும் பேச்சு வார்த்தைகளுக்குஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்தனர்.

உடனேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல முஸ்லிம் அமைப்புகளும், ஹிந்து அமைப்புகளும் இதை ஒரு சேரநிராகரிக்கின்றன. இதில் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பரிபூரணமாக அமைந்தது!

நமக்கு ஒரு சந்தேகம் - அயோத்தி விவகாரத்தை தீர்த்து வைக்க, இரு மதத்தினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி,வெற்றி காண்பது சாத்தியம் என்று நினைக்கிற பிரதமர் - விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றஅமைப்புகளிடம் பேசி இந்த அயோத்தி விவகாரம், இப்போது பயங்கரமாக வெடிப்பதற்கு வாய்ப்பில்லாமல்பார்த்துக் கொள்ள முடியும் என்று நம்பவில்லையா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X