குணமடைகிறார் கும்ப்ளே
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர்அணில் கும்ப்ளே, குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை ஜோஹன்னஸ்பர்க் நகரிலுள்ள மருத்துவமனையில், டாக்டர் மார்க் பெர்குசன், கும்ப்ளேவுக்குஆபரேஷன் செய்தார். ஆபரேஷனுக்குப் பிறகு சில உடற் பயிற்சிகளை செய்து வருமாறு, கும்ப்ளேவுக்கு டாக்டர்பெர்குசன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது கும்ப்ளேவின் தோளபட்டையில் காயம்ஏற்பட்டது.
கும்ப்ளேவின் உடல்நிலை குறித்து அவருக்கு ஆபரேஷன் நடந்த ரோஸ்பேங்க் மருத்துவமனைசெய்தித்தொடர்பாளர் ரெனிடா கோவேந்தர் கூறுகையில், கும்ப்ளே நலமுடன் உள்ளார். விரைவில் அவர்குணமடைவார் என்றார். இருப்பினும் எப்போது கும்பளே மருத்துவமனையிலிருந்து திரும்புவார் என்பதை அவர்தெரிவிக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.