For Daily Alerts
Just In
பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்ட விமான சேவை
சென்னை:
டெல்லியில் கடும் பனி மூட்டம், மேக மூட்டம் நிலவியதால், புதன்கிழமை சென்னைக்கும், டெல்லிக்கும்இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக, தினசரி காலை 6.40 மணிக்கு சென்னையிலிருந்து, டெல்லிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்இயக்கப்படும். ஆனால் புதன்கிழமை இந்த சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது, காரணம், டெல்லியில் நிலவிவந்த கடும் பனி மூட்டம்.
இதனால் வழக்கமாக செல்லும் நேரத்தை விட 2 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தில் விமானம் தாமதமாகப்புறப்பட்டு டெல்லி சென்றது.
இதுதவிர, டெல்லியிலிருந்து, சென்னை வரும் விமானமும் தாமதமாகவே வந்து சேர்ந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ்தவிர பிற நிறுவன விமானங்களும் கூட காலதாமதமாகவே வந்தன. இதனால் பயணிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர்.
Comments
Story first published: Thursday, January 18, 2001, 5:30 [IST]