கோஷ்டிப் பூசலால் கலகலத்த திமுக கூட்டம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி திமுக கூட்டம் கோஷ்டிப் பூசல் காரணமாக எந்த முடிவும் எடுக்காமல் முடிந்தது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரைவில் பாண்டிச்சேரி வரவுள்ளார். இதையடுத்து கட்சியைபலப்படுத்துவது உள்ளிட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பாண்டிச்சேரி யூனியன் பிரதேச திமுககூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்த முதல் விஷயம் சுமூகமாக பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டாவதுவிஷயத்தை எடுத்தபோது, கடும் குழப்பம் ஏற்பட்டது. மாநில திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன்,முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கூறிய சில கருத்துக்களுக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்களும் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் இறங்கினர். அங்கு பெரும்குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டம் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் தொண்டர்கள் சுமூகமானசூழ்நிலையில் இல்லாததால் அது நடக்குமா என்பது சந்தேகமே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications