For Daily Alerts
Just In
ராமேஸ்வரத்தில் கிட்டு ஆதரவு போஸ்டர்கள்
ராமேஸ்வரம்:
2000 க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் அகதிகள் முகாம் சுவர்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள்இயக்கத்தின் தலைவர் கிட்டுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இவைகள் ஜனவரி 16 ம் தேதி பொங்கல் தினத்தன்று ஒட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையால் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகளில் கிட்டுவுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, மறைந்த 10 இதரதலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் மண்டபம் முகாம் அருகிலுள்ள ரேஷன் கடை சுவர்களிலும், அதன் அருகேயுள்ளதண்ணீர் தொட்டியிலும் ஒட்டப்பட்டிருந்தன.
வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, January 20, 2001, 5:30 [IST]