மீண்டும் மீண்டும் நிதிநிறுவன மோசடி
சென்னை:
சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த தம்பதியினர் வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு பணத்தை கொடுக்க முடியாததால் தலை மறைவாகி விட்டனர்அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எத்தனையோ நிதி நிறுவனங்கள், எத்தனையோ மோசடிகள் ஆனாலும் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து வருகிறார்கள். இந்த முறைஏமாற்றியிருப்பவர்கள் சென்னை தியாகராய நகரில் கே.ஆர்.பி. ஜே.ஆர்.பி. என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள்.
இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் பிரகாஷ்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து தானாக ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி லட்சுமி சென்னையில் ஒருகல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தவர்.
இவர்கள் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் 133 பேர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்திருந்தனர். இந் நிலையில் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு பணத்தை திரும்ப தர முடியாததால் இவர்கள் இருவரும் நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாக ஓடி விட்டனர்.
பொதுமக்களிடமிருந்து ரூ இரண்டரை லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலை மறைவாக இருக்கும் கணவன் - மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்து வரும பிராகாஷ் - லட்சுமி தம்பதியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனபொருளாதார பிரிவு போலீஸ் ஐ.ஜி.பாலசுப்ரமணியன் அறிவித்துள்ளார்.