சினிமாவுக்காக செலவழிக்காதீர்கள் .. சின்னப்பிள்ளை அறிவுரை
தஞ்சாவூர்:
சினிமாவுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்துங்கள் என பிரதமர் வாஜ்பாய்கையால் விருது பெற்ற சமூக சேவகி சின்னப்பிள்ளை கூறியுள்ளார்,
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார களஞ்சியம் அறிமுக விழா அரசினர்உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவை களஞ்சியம் பொறுப்பாளரும் பிரதமரிடம் விருது பெற்றவருமானமதுரை சின்னப்பிள்ளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், நான் படிப்பறிவு இல்லாதவள். களஞ்சியம் என்றால் என்ன எனதெரியாது. 11 வருடங்களுக்கு முன் களஞ்சியம் அமைப்பில் சேர்ந்தேன்.
டான் அமைப்பினர் என்னிடம் நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள். அதிக வட்டிகொடுத்து வருகிறீர்கள். நீஙகள் களஞ்சியம் அமைப்பில் சேருங்கள் என்னை 6 மாதகாலம் கேட்டு வந்தார்கள். முதலில் யோசித்த நான் பின் அந்த அமைபில் சேர்ந்து அதன்பலன்களை உணர்ந்தேன
எங்கு சென்றாலும் டான் அமைப்பினர் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள்.ஒவ்வோர் பகுதியிலும் அமைப்பை ஏற்படுத்தி நம் சேமிப்பை பெருக்க வேண்டும்என்ற ஆர்வம் ஏற்பட்டது.
எனக்கு பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரும், ஆர்வமாகவும்,பண்பாடுடனும், ஜாதி வேறுபாட்டு உணர்வின்றி ஒரே குடும்பமாக பழக வேண்டும்.
நமக்கு கேட்க வேண்டிய உரிமையை கேட்போம். களஞ்சியம் தெய்வம்தான் என்னைஇந்த உயரத்துக்கு கொண்டு வந்தது.
பெண்கள் சினிமாவுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்.களஞ்சியம் அமைப்பில் சேருங்கள் என்றார்.