தாமரைக்கனியின் சிறை தண்டனை ரத்து
சென்னை:
அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்துசெய்வது என தமிழக சட்ட மன்றத்தில் திங்கள்கிழமை முழு மனதுடன் முடிவுசெய்யப்பட்டது.
1999-ம் ஆண்டு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைதாக்கிய சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனிக்கு சட்டசபைசபாநாயகர் 15 சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தாமரைகனிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன்சபாநாயகர் ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஆலோசனையின் பேரில் சட்டசபைபணி பரிந்துரை குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் தாமரைக்கனிக்குவிதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவை திங்கள்கிழமை சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார்.
இது தொடர்பாக அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான அன்பழகன் தீர்மானம்கொண்டு வந்தார் இது அவை உறுப்பினர்களால் ஆமோதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.