மறக்க முடியுமா இந்தியாவை .. கிளிண்டன் உருக்கம்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன், பதவியிலிருந்து விடைபெறுமுன் இந்திய பிரதமர் வாஜ்பாய் உள்பட உலகத் தலைவர்கள் 10 பேருக்குக் கடிதம்எழுதியுள்ளார்.
இதில் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடிதம் மிகவும் உருக்கமாக உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது, மறுபடியும் வாஜ்பாய்அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது ஆகியவற்றை குறிப்பிட்டு எழுதியுள்ளார் கிளிண்டன்.
கிளின்டன் அதிபர் பதவியிலிருந்து விடைபெறுமுன் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதம்:
2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தேன். சரியாக இப்போது 10 மாதங்கள் ஆகின்றன. இந்தியாவில் நான் மேற்கொண்டசுற்றுப்பயணம் என்னை மிகவும் மகிழ வைத்தது. அது மறக்க முடியாத சுற்றுப்பயணம்.
இந்தியாவில் மார்ச் மாதம் மேற்கொண்ட சுற்றுப்பயணமும், வாஜ்பாய் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமும் என்வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாகும். இந்த இரண்டு சுற்றுப்பயணங்களும் இரு நாட்டு உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுஉண்மை.
இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும், இந்தியாவும், அமெரிக்காவும் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பது என்விருப்பமாகும்.
இந்தியாவுடன், அமெரிக்கா நல்லுறவு கொள்ள வழிவகுத்து விட்டேன் என்ற பெருமையுடன் அதிபர் பதவியிலிருந்து விடைபெறுகிறேன். இந்தியாவில்பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளை சமாளிக்கும் உங்களின் திறமையை பாராட்டுகிறேன். இதை ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் உங்களது முயற்சியையும் பாராட்டுகிறேன். தெற்காசியாவில் அமைதி ஏற்படவும், மக்களுக்கு நல்லாட்சிஅளித்திடவும் உங்களை வாழ்த்துகிறேன் என்று தனது கடிதத்தில் கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.