சேலத்தில் கள்ளநோட்டுக்கள் நடமாட்டம்
சேலம்:
சேலத்தில் ரூ. 4.5 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நான்கு பேரைப் போசார் கைது செய்தனர்.
சேலத்தில் பல இடங்களில் கள்ளநோட்டுப் புழக்கம் இருந்து வருவதைப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து,கள்ளநோட்டுக் கும்பலைப் பிடிக்க தனிப்படை ஒன்றை போலீசார் அமைத்தனர். இந்தப் படையினர் பலஇடங்களில் சோதனையிட்டனர்.
இந்நிலையில் சேலம் நேதூராம்பட்டி அருகே ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார்.அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள்ளநோட்டுகள் இருந்தன.
இவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய தகவலின்அடிப்படையில், தாதக்காபட்டியைச் சேர்ந்த சண்முகம் (22). சங்மேஸ்வரன், கணேசன் ஆகியேரைக் கைதுசெய்தனர்.
இவர்களிடம் இருந்து போலீசார் சுமார் நாலரை லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.