3-வது அணி .. கண்ணப்பனுக்கு முழு அதிகாரம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மக்கள்தமிழ் தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கண்ணப்பனுக்கு முழு அதிகாரம் வழங்குவதாகஅக்கட்சி புதன்கிழமை அறிவித்துள்ளது.
யாதவர்கள் அதிகம் உள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சி, முதலியார்கள் அதிகம் உள்ள புதிய நீதிக்கட்சியுடன் சேர்ந்துதமிழ்நாடு ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை அமைப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில், புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன், மக்கள் தமிழ் தேசம் கட்சியின்பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. விரைவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியையும், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தையும் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைநடத்தவுள்ளேன்.
புதிய நீதிக்கட்சியும், மக்கள் தமிழ் தேசமும் சேர்ந்து அமைத்துள்ள தமிழக ஜனநாயக முன்னணிக்குத் தலைமைவகிக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசியுள்ளோம். எங்கள் கூட்டணிதேர்தலில் வெற்றி பெற்றால் அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். அப்போது மூப்பனாரைமுதல்வராக்குவோம்.
ஆளும் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.கட்சிகள் நடத்தும் ஆட்சியில் தமிழக மக்கள் திருப்தியடையவில்லை. மேலும்இக்கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்களுக்கு இப்போது மாற்றம் தேவை என்றார்கண்ணப்பன்.
முன்னதாக, தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கண்ணப்பனுக்கு முழு அதிகாரம் வழங்குவதாக கட்சிபொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
யு.என்.ஐ.