பிப். 19 ல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின் இதுகுறித்து அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில் பிப்ரவரி 19 ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் ஆரம்பமாகும். பிப்ரவரி 28 ம் தேதி மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2001 - 2002 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல்செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான பிப்ரவரி 19 ம் தேதி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும்உரையாற்றுவார்.
பிப்ரவரி 28 ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகியிடம்கேட்டிருக்கிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதே நாள் பிற்பகல் 2 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கூட்டத்தொடரில் தனியார் மசோதாக்கள் கொண்டு வரப்படும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கூட்டத்தொடர் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் மாதம் 23 ம் தேதி வரையிலும், இரண்டாவது கூட்டத்தொடர் ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கி மேமாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் பிரமோத் மகாஜன்.
ஐ.ஏ.என்.எஸ்.