சென்னை பேஷன் ஷோவில் உலக அழகி
சென்னை:
உலக அழகி பிரியங்கா சோப்ராவும், ஆசிய-பசிபிக் அழகி தியா மிர்ஸாவும் சென்னையில் நடக்கவுள்ள பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொள்கிறார்கள்.
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறும் இந்த ஆண்டிற்கான சர்வதேச தோல் கண்காட்சியை ஒட்டி நடைபெறும் பேஷன் ஷோவிற்கு மிஸ்.பெமினாமற்றும் பல அழகிகளுடன் இவர்கள் இருவரும் வருகை தருகின்றனர்.
நவீன தோலாடைகளின் உபயோகத்தை மக்களிடையே பரப்புவதற்காக கிளாஸிக், சிக் மற்றும் ஃபேன்டஸி ஆகிய தலைப்புகளின் கீழ் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிசென்னை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என நிகழ்ச்சி அமைப்பாளர் சதீஸ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
பிரபல ஆடை அலங்கார நிபுணர் ஹேமந்த் திரிவேதி இந்நிகழ்ச்சிக்கான ஆடை அலங்காரங்களை வடிவமைத்துள்ளார். தோல் பொருட்கள் மற்றும்தோலாடைகள் தயாரிக்கும் 17 முன்னணி நிறுவனங்களின் பல்வேறு வகையான பொருட்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.
யு.என்.ஐ.