For Daily Alerts
Just In
பாக்.கில் நிலநடுக்கம் ... 2 பேர் சாவு
கராச்சி:
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
சிந்து மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 வயது குழந்தையும், 8 வயது சிறுமியும் இறந்தனர். மேலும் சிந்து மாகாணத்தையடுத்துள்ளகுடிசை வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் சிந்துமாகாணத்தில் காலை 8.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது. சிந்து மாகாணம் கராச்சியின் தெற்குப்பகுதியில் உள்ளது.
பாகிஸ்தான் தவிர இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், கனடா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Comments
Story first published: Friday, January 26, 2001, 5:30 [IST]