ஸ்டாலின் முன் திக்குளிக்க முயன்ற தொண்டர்
சென்னை:
வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்படாததால் கோபமடைந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் சென்னை மேயர்ஸ்டாலின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
மொழிப்போர் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. சென்னை மூலக் கொத்தளம் பகுதியில்இருக்கும் தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் தி.மு.க.சார்பாக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்தவிழாவில் கலந்து கொள்ள சென்னை நகர மேயர் ஸ்டாலின் காரில் வந்து கொண்டிருந்தார்.
நினைவிடம் அருகே ஸ்டாலின் கார் வந்த போது ஒரு வாலிபர் திடீரென வந்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு காவலுக்காக இருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரிடமிருந்ததீப்பெட்டியை பறித்தனர்.
அவரிடம் விசாரணை செய்த போது அவர் பெரம்பூரில் வசித்து வரும் தி.மு.க. தொண்டர் என்பதும், அவர் பெயர்உதயசூரியன் என்பதும் தெரிய வந்தது. மேலும் வீட்டுவசதி வாரியத்தில் வீடு கேட்டு பல முறை மனு செய்தும் வீடுகிடைக்காததால் கோபமடைந்து தீக்குளிக்க முயற்சித்தததாகவும் தெரிய வந்தது.