அமெரிக்கா உதவிக்கரம்
சிங்கப்பூர்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜூனியர்புஷ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும், பாகிஸ்தானும் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் 43 வது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஜார்ஜ் டபிள்யூ ஜூனியர் புஷ் தனதுஅறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் அதிர்ச்சிடையவைத்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா முடிந்த அளவு நிவாரண உதவிகளைச்செய்யும்.
உலகிலேயே தொழில்துறையில் முன்னேறியும், பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தும் வரும் இந்தியாவில் 52வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் பயங்கரமானது என்று கூறியுள்ளார்.
கோபி அன்னன் வருத்தம்:
ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன், இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும்,உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐ.நா.செய்தித்தொடர்பாளர் பிரேடு எக்கார்டு கூறுகையில், நாங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவை இந்தியாவுக்குஅனுப்பியுள்ளோம். அவர்கள் குஜராத் உள்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அறிக்கைசமர்பிப்பார்கள். மேலும் ஐ.நா.நிவாரண உதவிகளில் பங்கேற்கும் என்றார்.
பாக். வருத்தம்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப், இந்தியாவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், பூகம்பம்குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்தியாவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் சார்பிலும், மக்கள் சார்பிலும்இரங்கலைத் தெரிவித்துள்ளோம்முன்னதாக, பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் சாவு எண்ணிக்கை 8 ஆகஉயர்ந்துள்ளது. ஆனால் பொருட்சேதம் பெரிய அளவில் ஏற்படவில்லை.
கனடா பிரதமர் ஜீன் கிறிஸ்டியன் இந்தியாவுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் நிவாரண உதவி அளித்துள்ளார்.