கிரிக்கெட் ஆட முடியாதே ... கும்ப்ளே வருத்தம்
மும்பை:
சமீபத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்ட தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்து வரும் அனில் கும்ப்ளே குறைந்தது அடுத்த 4மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டித் தொடரில் விளையாட முடியாமல் போவது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஆஸ்திரேலிய அணிக்கான போட்டி நேரத்தில் எனக்குதோள்பட்டை பிரச்சனை ஏற்பட்டது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்.
நான்கு முதல் ஆறு மாத காலத்தில் படிப்படியாக தோள்பட்டை வலி சரியாகும். நீண்ட நாட்களாகவே எனக்கு தோள்பட்டை பிரச்சனை உள்ளது.நைரோபியில் நடைபெற்ற போட்டியில் மிகவும் அதிகமானது என்றார்.
கும்பளேக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் குறித்து இந்திய அணியின் டாக்டர் ஆன்ட்ரூ லேபஸ் கூறுகையில், அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் மார்க்என்பவரால் கும்ப்ளேவின் பந்து வீசும் வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு முன் எதிர்பார்த்ததைவிடபிரச்சினைகள் குறைவாகவே இருந்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.