For Quick Alerts
For Daily Alerts
Just In
தொகுதி பங்கீடு .. முதல்வருடன் ம.தி.மு.க ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விரைவில் பேசிமுடிவெடுப்போம் என்று ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை கூறினார்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வைகோநிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபைத் தேர்தல் யுக்திகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அதற்குத் தகுந்த நேரத்தில் கூட்டணியின் தலைவர் கருணாநிதி கூட்டத்தைக் கூட்டுவார். அப்போது நாங்கள் கலந்துகொண்டு போட்டியிடும் தொகுதிகள் குறித்துப் பேசி முடிவெடுப்போம் என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, January 27, 2001, 5:30 [IST]