For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவ முன்வருகிறது குவைத்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

ஐக்கிய அரபு நாடுகள் குஜராத்துக்கு நிவாரணநிதி அளிக்க முன் செய்துள்ளன.

குவைத் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. குவைத் செஞ்சிலுவைச் சங்க தலைவர் பர்ஜாஸ் ஹமீது அல் பர்ஜாஸ் இதுகுறித்துக்கூறுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தது.

அப்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது குறித்துத் தெரிந்து கொண்டோம். இது வரலாற்றில் அழிக்க முடியாதசோகமாகும் என்பது உலக நாடுகள் அறிந்த உண்மை.

குவைத் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் குஜராத் நிலை என்னாயிற்று என்பது குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகிறார்கள். மேலும்குவைத், குஜராத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி செய்ய முடிவெடுத்துள்ளது என்றார்.

ஈரான் அதிபர் முகமது காட்மி இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், ஏராளமானகுடும்பங்கள் வீடு வாசல்களை, உறவினர்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்தது மனதை நெகிழ வைக்கிறது. அவர்களது குடும்பத்திற்காக நாங்கள்தொழுகை நடத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, ஈரான் வெளியுறவுத்துறை ஹமீது ரேசா ஆஸிஃபி கூறுகையில், நாட்டின் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பரிதாபகரமானது.பூகம்பத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற பிராத்திக்கிறோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X