கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது இடத்தில் ஆனந்த்
விஜ்க் ஆன்ஜீ:
கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் உலக சாம்பியன்விஸ்வநாதன் ஆனந்த் ஜெரோன் பிக்கெட்டை வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன்ஆனந்த் முதல் 10 சுற்று போட்டிகளில், இரண்டாவது சுற்றில் மட்டுமே வெற்றிபெற்றார். மற்ற 9 சுற்றில் நடந்த போட்டிகளை ஆனந்த் டிரா செய்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த 11-வது சுற்று போட்டியில் சிறப்பாக விளாைடியஆனந்த் நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் ஜெரோன் பிக்கெட்டை வென்றார்.
ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடன் ரஷ்யாவின்கிரேம்நிக்கும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்
ஸ்பெயினின் அலோக்ஷி ஷிரோவும், ரஷ்யாவைச் சேர்ந்த அல்ெகசாண்டர்மொரோசெவிச் ஆகியோர் 7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.ரஷ்யவீரர் காஸ்பரோவ் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.