அல்ஜீரியாவில் 25 பேர் கழுத்தை அறுத்துக் கொலை
அல்ஜீயர்ஸ் (அல்ஜீரியா):
அல்ஜீரியாவிலிருக்கும் புரட்சிக்காரர்கள் 25 பேரை கழுத்தை அறுத்து கொன்றனர்.
அல்ஜீரியாவில் இந்த ஆண்டு நடந்த கொடுமையான வன்முறையாக இதுகூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில், 16 பேர் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் 4பெண்கள் ஆகியோர் அடங்குவர்.
25 பேரும் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைஇந்த சம்பவம் அல்ஜீரியாவிற்கு 220 கிலோ மீட்டர் மேற்கே இருக்கும் இ குடாய்பாகிராமத்தில் நடந்தது.
கொல்லப்பட்ட 25 பேரும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையைதீவிரவாத இஸ்லாமிய ஆயுத குழுவினர் செய்ததாக கூறப்படுகிறது. புரட்சியாளர்கள்20 வயது பெண்ணையும் கடத்திச் சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் வாழ்பவர்கள் 1997-ம் ஆண்டு முதல் தற்காப்புக்காக ஆயுதங்கள்கேட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு அதிகாரிகள் எந்த விதமான பதிலும் கூறவில்லைஎன மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
அல்ஜீரியாவில் இந்த மாதம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை90க்கும் மேலாகும்.
1992-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தீவிரவாத இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர்.ஆனால் அவர்கள் வெற்றி பெற்றது ஏற்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 100,000 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.