For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைகொடுக்கிறார் ஸ்டீவ் வாக்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சிறப்பு கிரிக்கெட் ஆட்டம்நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் வாஹ் இந்தப் போட்டியில் கலந்து கொள்லள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில் நிதி வசூல் செய்வதற்காக இந்தியாவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ இப் போட்டி நடத்தப்படும்.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அங்கு முழுவீச்சில் நிதிதிரட்ட ஆரம்பித்துவிட்டனர். சிட்னி நகரில் வசிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட குஜராத் மக்கள், நிதியுதவி செய்துள்ளனர். நிதி திரட்டும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குஜராத் சமாஜத்தின் தலைவர் ஹரி கோகில் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம் குறித்து ஆஸ்திரேலியாவில்வாழும் மக்களுக்கு தெரியும் வகையில் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்து வருகிறோம்.

அந்த விளம்பரங்கள் மூலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அகமதாபாத் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் எனது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அங்கு தகவல் தொடர்புகடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் என்னால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னைப்போல் இங்கு வாழும் அதிகமான மக்கள்,தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் என்றார்.

ஐக்கிய இந்திய சங்கத்தினர், ஏற்கனவே நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிட்னி நகரில் உள்ள குஜராத் பூகம்ப நிவாரண நிதி என்றபெயரில் தேசிய வங்கியில் கணக்கு துவக்கியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X