கோர்ட்டில் பார்க்கலாம் .. அஸாருக்கு ஏ.சி.முத்தையா பதில்
பெங்களூர்:
அஸாருதீன் குற்றச்சாட்டுக்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நீதிமன்றத்தில் தகுந்த பதிலளிக்கும் என அதன் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித்தார்.
பெங்களூரில் இந்திய கிரிக்கெட்டிற்கான கிரிக்கெட் சாப்ட்வேர் ஒன்றைத் தொடங்கி வைத்தபின் நிருபர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் ஊழல் குறித்துவிசாரிப்பதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மாதவனை நியமித்தது சரியான முடிவுதான் என்றார்.
அஸாருதீன் கோரியபடி கவாஸ்கர், டெண்டுல்கர்,சாஸ்திரி போன்றோர் மீது விசாரணை நடத்த இயலாது, ஏனெனில், சி.பி.ஐ. அளித்த அறிக்கையில் இது பற்றிகூறப்படவில்லை . தனிப்பட்ட முறையில் எவர் மீதும் விரோதம் இல்லை.
வாரியத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றதால் நீதிமன்றத்தில் வாரியம் தகுந்த பதிலளிக்கும் என்ற அவர் அதற்கு மேல் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
இதனிடையே, இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பரோடாவில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி குஜராத்தில் நிகழ்ந்தபூகம்பத்தினால் நாக்பூருக்கு மாற்றப்பட உள்ளது என்று கிரிக்கெட் வாரியச் செயலர் லீலே அறிவித்தார். இது பற்றிய முடிவு வாரியத் தலைவருடன் கலந்துபேசி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குஜராத் பூகம்பத்தை அடுத்து இந்தியா-இங்கிலாந்துக்கிடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியும் குஜராத்திலிருந்துமாற்றப்படுகிறது.