இங்கிலாந்து அலுவலகம் மீது குண்டுவீச்சு
கொழும்பு:
இலங்கையில் உள்ள இங்கிலாந்தின் அரசு சாரா அமைப்பு அலுவலகத்தின் மீது, புதன்கிழமை கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகர் கொழும்பு பூங்கா சாலையில் அமைந்திருக்கும் இங்கிலாந்தின் அரசு சாரா அமைப்பான ஆக்ஸ்பான் அலுவலகத்தின் மீது கை எறி குண்டு வீசிதாக்குதல் நடத்தப்பட்டது என ஆக்ஸ்பாமின் ஒருங்கிணைப்பாளர் சிமன் ஹாரிஸ் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. சில ஜன்னல்கள் மட்டும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதுதெரியவரவில்லை.
தற்போது ஆக்ஸ்பாம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நார்வேயால் குழந்தைகளை காப்போம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் அலுவலகம் மீதுகடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதப்ை போல் உள்ளது. இந்த தாக்குதலிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஒரு வாகனம் மட்டுமேசேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதர் எரிக் சோல்ஹேம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் புதன்கிழமை மீண்டும் இலங்கை வருவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்பாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எரிக்கின் வருகைக்கும் தொடர்பிருக்குமா என்பது தெரியவில்லை.
இந்த தாக்குதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு 2 மாத சுற்றுப்பயணமாக வந்துள்ள போது நடந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇலங்கையில் இரண்டு மாத சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் விடுதலை புலி அமைப்பு லண்டனைத் தலைமையிடமாகக் கொணடு செயல்பட்டு வருகிறது. இதை தடை செய்யஇலங்கை அரசு அந்நாட்டைகேட்டுக் கொண்டுள்ளது. இந்த தடை பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்ததாக்குதல் இங்கிலாந்திற்கு எச்சரிக்கையாக நடத்தப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகள், இலங்கை தமிழர் பிரச்சனையில் அயல் நாட்டவர் ஈடுபடுவதை தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.