For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெல்ல உற்பத்தி பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோலாப்பூர்:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட உறவினர்களைப் பார்ப்பதற்காக கோலாப்பூரிலுள்ள வெல்ல உற்பத்தியில்ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குஜராத் சென்று விட்டதால் அங்கு வெல்ல உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோலாப்பூரில் தயாராகும் வெல்லத்திற்கு குஜராத் மாநிலத்தில் பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் நல்லகிராக்கி உள்ளது. இங்குள்ள வெல்ல ஆலைகளில் வெல்லம் மற்றும் சர்க்கரை ஆலைகளில் வேலை செய்பவர்களில்பெரும்பாலானவர்கள் குஜராத்திலிருந்து வந்தவர்கள்.

பூகம்பத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் வெல்லம் ஆலைக்கு வேலைக்கு ஊழியர்கள் யாரும் வரவில்லை.இதனால் ஆலைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் வியாபாரம் கடந்த 4நாட்களாக நடக்கவேயில்லை.

வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலையில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளும் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சர்க்கரை ஆலை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏற்கனவே உற்பத்திசெய்த சர்க்கரையில் 75 சதவீதத்தை சந்தைக்கு அனுப்பி விட்டோம். இப்போது ஆட்கள் பற்றாக்குறையால்உற்பத்தையை நிறுத்தி விட்டோம்.

வெல்ல உற்பத்தி மட்டுமல்லாமல், தினமும் கோலாப்பூரிலிருந்து அகமதாபாத்துக்கு சர்க்கரை ஏற்றுமதிசெய்யப்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோலாப்பூரிலிருந்து வெல்லத்தை ஏற்றிச் செல்லும் லாரிகள்ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோலாப்பூர் மாவட்ட விவசாயப் பொருள் உற்பத்தி கமிட்டி உறுப்பினர்கள், இன்னும் 2 நாட்களில் நிலைமைசரியாகி விடும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் கோலாப்பூரில் வசிப்பவர்கள் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.இதனால் கோலாப்பூரில் இயங்கி வரும் வெல்ல ஆலையில் வேலை செய்ய ஆட்களே இல்லை என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X