எரியும் தீயில் எண்ணெய் ..
அகமதாபாத்:
குஜராத்தில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பகுதிகளில் கொள்ளையர்கள் அட்டகாசம்தலைதூக்கியுள்ளது.
பூகம்பம் ஏற்பட்ட பூஜ் என்ற மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு உள்பட்ட பச்சாவ் என்றதாலுகா மிகவும் செல்வ செழிப்பு கொண்டதாகும். வசதியானவர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர்.
40 ஆயிரம் பேர் கொண்ட அப்பகுதியில் தற்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.கிட்டத்தட்ட கிராமமே அழிந்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள துயரத்தோடு, இப்போது கொள்ளையர்கள்வடிவில் மற்றொரு சோகம் கிராமத்தினரைத் தாக்கியுள்ளது.
கொள்ளையர்கள் சிலர் கிராமத்தில் புகுந்து கிடைத்தவற்றைக் கொள்ளையடித்து வருகிறார்கள். பச்சாவ்தாலுகாவிலுள்ள மான்பாரா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்பாய் தாகூர் என்பவரின் கடையில் கொள்ளையர்கள்புகுந்து தாக்கினார்கள். கொள்ளையர்கள் ஜீப்பில் வந்து திருடிச்சென்றதாகத் தெரிகிறது.
ரூ 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். சாலைகள், தொலைத்தொடர்பு வசதிகள்துண்டிக்கப்பட்டு விட்டதால், எதைப்பற்றியுமே புகார் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கிறார்கள்.சுரேஷ்பாய் கூறுகையில், நாங்கள் உறவினர்களை இழந்து, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். மனித நேயமேஇல்லாமல் எங்களிடம் வந்து கொள்ளையடித்துக் கொண்டு செல்கிறார்கள்.
இன்னொருவர் கூறுகையில், நாங்கள் உறவினர்களை இடிபாடுகளுக்கிடையில் போட்டுக் கொண்டு தவிக்கிறோம்.ஆயுதங்களுடன் வந்து எங்களிடம் திருடிக் கொண்டு செல்கிறார்கள். அவர்களை எப்படி எதிர்த்துப் போராடமுடியும் என்று கேட்டார்கள்.