பதவி விலக மாட்டேன் .. வாஹித் பிடிவாதம்
ஜகார்தா:
பல்வேறு பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும் இந்தோனேஷிய அதிபர் அப்துல்ரஹ்மான் வாஹித், தன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்நிறைவேற்றப்பட்டும் கூட பதவியிலிருந்து விலக மாட்டேன் என கூறியுள்ளார்.
வாஹித் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறி அவர் மீது கண்டனம் தெரிவித்துநாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அவர் திறமையில்லாத ஆட்சிநடத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சுாட்டு உள்ளது.
வாஹித் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில்வெள்ளிக்கிழமை எழுந்தது. நாடாளுமன்றம் மட்டுமல்லாது, இந்தோனேசியாமுழுவதிலும் வாஹித்திற்கு எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது.
வாஹித்துக்கு முன் அதிபர் சுகார்தோ மீதிருந்தது போலவே இவர் மீதும்குற்றச்சாட்டுகள் இருப்பது மக்களிடையேயும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து வாஹித் விலக மாட்டார் என அதிபரின்செய்தித் தொடர்பாளர் விமர் விடோலியர் கூறியுள்ளார். இது குறித்து அவர்கூறுகையில், அதிபர் 2004-ம் ஆண்டு வரையில் பதவியில் நீடிப்பார் என கூறினார்.
வாஹித் கூறுகையில், கண்டன தீர்மானம் ஜனநாயகத்திற்கு ஒரு பாடம். ஆனால்விசாரணைக் கமிஷன் கொடுத்த அறிக்கை தவறானது. கமிஷன் கொடுத்துள்ளவிவரங்கள் உண்மைக்கு புறம்பானவை என கூறினார். இந்த விஷயம் குறித்து மேலும்கருத்து கூற மறுத்து விட்டார்.
வாஹித் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து நிரூபிக்க நான்கு மாதங்கள் ஆகலாம்.அதற்கு முன் அவர் மீது நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.