இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் .. புஷ் அனுமதி
வாஷிங்டன்:
இந்திய கப்பற்படை ஹெலிகாப்டர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்ய அமெரிக்க அதிபர் புஷ் அனுமதி அளித்துள்ளார்.
பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஒட்டி ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்திய கப்பற்படையில் உள்ள ஸீகிங் வகை ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனமும், இந்திய அரசும் செய்த முயற்சியின் பலனாக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பான அமெரிக்காவின் உத்தரவு இன்று வெளியிடப்பட்டதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் நரேஷ் சந்திரவின் செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.
இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பயனற்ற இத்தடைகள் நீக்கப்படும் என்று முன்னதாக அமெரிக்கச் செயலர் காலின் பாவெல் தெரிவித்திருந்தார்.
ஈராக் மற்றும் லிபியா தவிர மற்ற நாடுகளின் மீது விதிக்கப்பட்ட தடைகள் பற்றி அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவேபுஷ்ஷின் இந்த அனுமதி அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.