For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரதமர் சுற்றுப்பயணம் ரத்து
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம் காரணமாக, பிப்ரவரி 8 முதல் 14-ம் தேதி வரை மேற்கொள்ளவிருந்த மலேசியமற்றும் ஜப்பானிய சுற்றுப்பயணத்தை பிரதமர் வாஜ்பாய் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து டெல்லியில் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது எகிப்து தலைநகர்கெய்ரோவில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் கலந்து பேசியபின் இந்த முடிவைபிரதமர் எடுத்துள்ளார்.
தனது முடிவை சம்பந்தப்பட்ட அரசுகளிடம் தெரிவித்து விடுமாறு, வெளியுறவுத் துறை செயலாளர் லலித்மான்சிங்கிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார் அவர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், டோக்யோ, ஒசாகா ஆகியநகரங்களில் 4 நாட்களும் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]