For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டு 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு பந்திப்போரா பகுதியில், பாதுகாப்ப்பு படை வீரர்கள் சென்ற ரோந்து அணிவகுப்பின் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் திருப்பிச் சுட்டதில் 2 பேர் செத்தனர். தானியங்கித் துப்பாக்கிகள்மற்றும் கிரனேடுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே, சனிக்கிழமை காலை சோபோர் என்ற இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில்யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]