For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கபாலு மீது நடவடிக்கை .. இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

ம துரை:

சட்ட விரோத போக்கை கண்டித்து தங்கபாலு மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை மதுரைவந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் அலட்சியமாக நடந்து வருகிறது.இதை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணி மற்றும் மாநாடு நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது இந்த மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சி தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்கிறார்.அப்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்காக திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள், நிதி உதவிஆகியவை சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படும்.

அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தைநடத்த கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி மீண்டு சென்னை வரவிருக்கிறார்.

தனித்து ஆட்சி அமைக்கவும், ஆட்சியில் பங்கு பெறவும் காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் தற்போதையநடைமுறைக்கு எது சாத்தியமோ அதனடிப்படையில் செயல்படுவோம். அதை ஏற்றுக் கொள்வோம்.

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டு சேருமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. கட்சிக்கு எதிரானகட்சி விரோத போக்குகளில் தங்கபாலு ஈடுபட்டு வருகிறார். என்னை பதவியிலிருந்து நீக்கி விடுவார்கள் எனஜோசியம் கூறி வருகிறார்.

இமாசல பிரதேசம், பிகார், ஹரியானா மாநிலங்களில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதே போல் தங்கபாலு மீதும் நடவடிக்கைஎடுக்கப்படும்.

நானும் அவர்கள் செயல்கள் குறித்து சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி வருகிறேன். தமிழகத்தில் எனக்கோ,தங்கபாலுவுக்கோ எந்த செல்வாக்கும் கிடையாது. சோனியா காந்திக்கு தான் செல்வாக்கு உள்ளது என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X