மோப்பநாய்கள் பேருதவி
மும்பை:
மனிதனின் செல்லப்பிராணி, உற்ற நண்பன் என்றழைக்கப்படும் நாய்கள், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பிணங்களைகண்டுபிடிப்பதில் பேருதவி செய்து வருகின்றன.
குஜராத்தில் கட்ச், பூஜ், ராஜ்கோட், அகமதாபாத் உள்பட அனைத்து பகுதிகளிலும் இடிபாடுகளுக்கிடையில் உயிருக்குப் போராடும் மனிதர்கள்,குழந்தைகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது இந்த மோப்ப நாய்கள்.
மீட்புப் படையினர் மற்றும் போலீஸாருடன் மோப்ப நாய்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவைகள் இறந்த சடலங்களையும், உயிருக்குப்போராடும் மனிதர்களையும் அடையாளம் காட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மோப்பம் பிடிக்கும் ஆற்றல் படைத்த நாய்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு பாலைவனம் போல் காட்சியளிக்கும் பகுதிகளில் சடலங்களை வெகுஎளிதாக மோப்பம் பிடித்துக் கண்டு பிடித்துவிடுகின்றன.
ஆங்காங்கே கிடக்கும் துணிமணிகள், சிதைந்து போன உடல் உறுப்புக்கள் ஆகியவைகளை வைத்து மோப்ப நாய்கள் சடலங்களையும், உயிருக்குப் போராடும்மனிதர்களையும் அடையாளம் கண்டு பிடித்துவிடுகின்றன. இறந்து கிடக்கும் மனிதர்கள் தவிர, இறந்து கிடக்கும் கால்நடைகள், குருவிகள், விலங்குகள்,பூகம்பம் நடந்த இடத்தில் நடமாடும் கொள்ளையர்களையும் கண்டு பிடித்து விடுகின்றன இந்த மோப்பநாய்கள்.
இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் மீட்புப்படை மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்து வரும் மீட்புப் படையினரும் மோப்ப நாய்ப்படையின்அத்தியாவசியத்தையும், அவசியத்தையும் உணர்ந்து அவைகளைத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.
நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்கள் பிணங்களை அடையாளம் காண்பதில் பேருதவி புரிகின்றன. இதுவரை கட்ச், பூஜ், ராஜ்கோட், சுரேந்திரநகர், சூரத்ஆகிய நகர்களில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கும் நகை, பணம் ஆகியவற்றையும் நாய்கள் மோப்பம் பிடித்துக் கொடுத்துள்ளன.
ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களும், மகாராஷ்டிராவிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டமோப்ப நாய்களும் குஜராத் மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.