For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொற்றுநோய் அபாயம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே நீக்கப்படாத அழுகிய சடலங்களாலும், மாசு கலந்தநீராலும் தொற்று நோய்கள் ஏற்பட்டு, அவை மிக வேகமாகப் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக செஞ்சிலுவைச்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் உணவுப்பொட்டலங்கள், மருந்துகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துணி வகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அங்கு இடிந்த விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சடலங்கள் நீக்கப்படாததால் தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளதால் அங்கு சடலங்கள் நீக்கப்படும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.

இருப்பினும் பூகம்பத்தால் நல்ல உடல் ஆரோக்கியமுடன் இருந்த ஒருவர் இறந்தால் அவரது சடலத்தால்தொற்றுநோய் பரவும் அபாயம் எதுவும் இல்லை.

இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், டாக்டர் சான்பிளடா கூறுகையில், அழுகிய சடலங்கள் உடனடியாகநீக்கப்படாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்காக திரவ மருந்துகளை கட்டிடஇடிபாடுகளுக்கிடையில் தெளித்து வருகிறோம்.

மேலும் பூகம்பத்தால் குடிநீர் பெருமளவு மாசுபட்டுக் கிடக்கிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய செஞ்சிலுவைச்சங்கம் சுத்தமான குடிநீரை வழங்கி வருகிறது.

பூஜ் நகரில் குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையத்தை செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 20,000லிட்டர் நீரை சுத்தம் செய்யப்படுகிறு. இருப்பினும் பூஜ்ஜில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X