அமைதி திரும்புகிறது
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள.
இருப்பினும் பூகம்பம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இங்கு வாழும் 40 லட்சம் மக்கள், பூகம்பத்தால் மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்றபயத்தில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வீடுகளுக்கு எதிரே வெட்டவெளியில் கூடாரங்கள் அமைத்துத் தங்குகிறார்கள்.
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை வழக்கம் போல் உள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆயினும்தனியார் கல்வி நிலையங்களும், கம்ப்யூட்டர் வகுப்புகளும் வழக்கம் போல் நடைபெறுகின்றன. அங்கு மாணவர்களின் எண்ணிக்கையும் வழக்கம் போல்உள்ளது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அகமதாபாத்மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகரப்புற வளர்ச்சிக் கழகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வந்த பல மாடிக் கட்டிடங்களுக்குப் பதில் மாற்றுக்கட்டிடங்களில் இயங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பூகம்பம் ஏற்பட்டு அதற்குப்பின் பல தடவை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் மக்கள் இன்னும் பீதியிலேயே உள்ளனர். அகமதாபாத் நகராட்சி துணைஆணையர் வினய் வியாசா கூறுகையில், அகமதாபாத்தில் 84 க்கும் மேற்பட்ட பல மாடிக்கட்டிங்கள் இடிந்து விழுந்து பழுது பார்க்க முடியாத வகையில்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்கள் ஊழியர்களுக்கு 43 கட்டிடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளோம். நகராட்சி தீயணைப்புப் படை வீரர்கள் மக்களுக்குத்தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப்பொருட்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எத்தனை கட்டிடங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் இடிந்து விழுந்தன என்பது குறித்துகணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அது இன்னும் ஓரிரு நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடிபாடுகளுக்கிடையில் இறந்து கிடக்கும் சடலங்களை நீக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் ஓரிரு நாட்களில்முடிவடையும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.