For Daily Alerts
Just In
ஸ்ரீநகரில் ஊரடங்கு வாபஸ்
ஸ்ரீநகர்:
சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் அமல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 6சீக்கியர்களை தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர். இதையடுத்து ஸ்ரீநகரில் பதற்றமான நிலைஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் ஒரு சீக்கியர் இறந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதன்கிழமை நகரில் வாகனங்கள்வழக்கம் போல இயங்கின. நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் வழக்கம் போல செயல்பட்டன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]