For Daily Alerts
Just In
பா.ம.க.வால் வாஜ்பாய்க்கு பாதிப்பில்லை .. சந்திரபாபு
ஹைதராபாத்:
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதால் வாஜ்பாய் அரசிற்கு பாதிப்பில்லைஎன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்காததால் மேற்கொண்டு கருத்து சொல்ல இயலாது என்றார் சந்திரபாபுநாயுடு.
இஞ்சம்பள்ளி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க தெலுங்கு தேசம் மத்திய அரசை வலியுறுத்திய போதும்ஆந்திர மாநில பா.ஜ.க.வினரின் எதிர்ப்பால் அது முடியாமல் போனது. இத்திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த பின்அதற்கான நிதியுதவி ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இத்திட்டம் குறித்துவிவாதிக்க தேவைப்பட்டால் சர்வ கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும் நாயுடு தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]