For Daily Alerts
Just In
"பயில்வானாகும் தூத்துக்குடி துறைமுகம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகம் செவ்வாய்க்கிழமை 57,718 டன்கள் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் எஸ்.மச்சேந்திரநாதன் இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இது வரை அதிக பட்சமாக 1999, ஆகஸ்ட் 9ம் தேதி 52,315 டன்கள் சரக்குகள் கையாண்டது தான்சாதனையாக இருந்தது. அதன்பிறகு தற்போது பிப்ரவரி 6ம்தேதி கையாண்ட சரக்குகளின் அளவான 57,718 டன்கள் சாதனை அளவாக மாறியுள்ளது.
பிப். 6ம்தேதி மொத்த சரக்கு போக்குவரத்து 103.66 லட்சம் டன்கள். கடந்தாண்டு இதே நாளில் சரக்கு போக்குவரத்து 81.98லட்சம் டன்கள்.
நடப்பாண்டில் இதுவரை 1,29,839 கண்டெயினர்கள் கையாளப்பட்டதாகவும் இது கடந்தாண்டு அளவான 1,15,194 கண்டெயினர்களை விட 12.71 சதவீதம்அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 8, 2001, 5:30 [IST]