புதுவை சபாநாயகர் உத்தரவு செல்லாது .. ஐகோர்ட்
சென்னை:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்து பாண்டிச்சேரி சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பாண்டிச்சேரி த.மா.கா.விலிருந்து பிரிந்த எஸ்.மனோகர், ஏ.எழுமலை, கே.ராஜசேகரன் ஆகியோரை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.சுப்பிரமணியன், ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்என்பது தமிழ்நாடு, பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு என்று பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் கொடுத்துள்ளவிளக்கம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
தவறான வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுவை த.மா.கா.வில் இருந்து விலகிய 3 சட்டமன்றஉறுப்பினர்களை தகுதியிழக்கச் செய்யும் சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
யு.என்.ஐ.