For Daily Alerts
Just In
பாலைவன விழா ரத்து
ராஜ்கோட்:
குஜராத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் பாலைவன விழா, பூகம்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.
கட்ச் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் பாலைவன விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. குஜராத் மாநில சுற்றுலாத்துறையால்கொண்டாடப்படும் இந்தப் பாலைவன விழா இந்திய மற்றும் வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும்.
ஆனால் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில், கட்ச் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் முழுவதுமாகவோ அல்லதுபாதியாகவோ சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாலைவன விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]