For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8500 வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற விருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 500 ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர் எனதிருப்பூரில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.என். ரெட்டி தெரிவித்தார்.

திருப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற கனரா வங்கி தனது ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக்கோரியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பேருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற இதுவரை 8 ஆயிரத்து 500 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குவிருப்ப ஓய்வு நிதியாக 720 கோடி ரூபாயிலிருந்து 750 கோடி ரூபாய் வரை அளிக்க வேண்டியிருக்கும்.

விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவோருக்கு 100 சதவீதம் ரொக்கமாக பணம் அளிக்கப்படும். மற்றவங்கிகளில் இவ்வாறு ஓய்வு பெறுவோருக்கு பாதி ரொக்கமாகவும், பாதி வைப்பு நிதிப் பத்திரமாகவும்வழங்கப்படுகிறது.

கனரா வங்கியை மற்ற வங்கியுடன் இணையும் வாய்ப்பு எதுவும் இல்லை. இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம், கனராவங்கிக்கு நட்புரீதியான வங்கி என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியுள்ளது.

கனரா பாங்க் வேளாண்மைக்காக இதுவரை 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கல்விக்காக 125கோடி ரூபாய் கடனுதவி வழங்கியுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X