For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீஸார் பலி
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்பிரிவு தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 8 போலீஸ்காரர்கள் இறந்தனர். நான்கு தீவிரவாதிகள் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஐஜி. அசோக் பான் கூறுகையில், 2 தீவிரவாதிகளை போலீஸார் திருப்பித் தாக்குதல் நடத்திக்கொன்றனர். 2 பேர் தப்பி விட்டனர். மொத்தம் 4 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் முக்கிய வாசல் வழியாக இவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]