குஜராத்திற்கு உதவிய ஆஸி, மே.இ. தீவு
சிட்னி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டும் போட்டியாக ஆஸ்திரேலியாவுக்கும், மேற்குஇந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே மெல்போர்ன் நகரில் நடந்த போட்டி நடத்தப்பட்டது.
இரு அணிகளும் விளையாடும் மூன்று இறுதிப் போட்டிகளில் 2-வது இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமைமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அப்போட்டி, குஜராத் மக்களுக்கு நிதி சேர்க்கும் போட்டியாகஅறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உதவி நிறுவனமான வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியா இந்தப் போட்டிக்கு ஏற்பாடுசெய்திருந்தது. போட்டிக்கு இடையே, மைதானத்தில், குஜராத் பூகம்ப காட்சிகள் தொலைக்காட்சி திரையில்காட்டப்பட்டன.
போட்டிக்கு இடையே அடிக்கடி இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விடுத்த வேண்டுகோள்கள்ஒலிபரப்பப்பட்டன. மும்பையில் தான் இருந்தபோது, பூகம்ப பாதிப்புகள் அங்கும் இருந்ததை அவர் விவரித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.