பூகம்ப நிவாரணம் .. சோனியா புகார்
பூஜ்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நிவாரண உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை என்று அகில இந்தியகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாதோப்பூர் பகுதியைப் பார்வையிட்ட சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், இங்கு வசித்து வரும்மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்றார்.
முன்னதாக, சோனியா காந்தி பிற்பகல் 11.30 மணிக்கு குஜராத் மாநிலத்துக்கு வந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் மாவட்ட அதிகாரிகளை அழைத்து நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். சோனியா காந்தி, பூஜ், பச்சாவ், அஞ்சார்தவிர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 13 கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுவார்.
யு. என். ஐ.