For Daily Alerts
Just In
அண்ணாவின் மொழிக் கொள்கை .. புகழ்கிறார் வைகோ
தஞ்சாவூர்:
அண்ணாவின் மொழிக் கொள்கையை பின்பற்றியதால்தான் தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் ஏராளமான அளவில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும.தி.மு.க.தலைவர் வைகோ திங்கள்கிழமை கூறினார்.
தஞ்சாவூர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மாணவர்கள் தமிழ் மூலம் கல்விகற்க வேண்டும். இந்தி மொழி கூடாது. ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.
அண்ணாவின் இந்தக் கொள்கையை நாம் பின்பற்றியதால்தான் தமிழர்கள் பலர் வெளிநாடுகளில் பல துறைகளில் வேலை வாய்ப்புக்களில் உள்ளனர். இந்திமொழி பேசும் உத்தரப்பிரதேசம், பிகார் மாநில மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்கள் இல்லை என்றார் வைகோ.
Comments
Story first published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]