மாஜிஸ்திரேட் மீது செருப்பு வீசிய கைதி
சேலம்:
சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி மீது ஒரு விசாரணைக் கைதி செருப்பை வீசினார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், கரசோதிப்பட்டி அருகே உள்ள பெருமாள் மலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் மீது பைக்திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக மணிகண்டனைப் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் இவர் தொடர்ந்து சிறையில் இருந்தார். மேலும் இவருக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள்சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
இரண்டு சக்கர வாகன திருட்டு வழக்கில் இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணை நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென மாஜிஸ்திரேட் மீது மணிகண்டன் செருப்பை வீசினார்.
அதிர்ஷ்டவசமாக செருப்பு மாஜிஸ்திரேட் குப்புசாமி மீது படாமல் மேஜை மீது விழுந்தது. இதையடுத்து அந்தநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பரபரப்பைப் பயன்படுத்தித் தப்பி ஓட மணிகண்டன் முயன்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
இது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மாஜிஸ்திரேட் குப்புசாமி, முன்பு ஒரு வழக்கில், மணிகண்டனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைஅளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் செருப்பை வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.