For Daily Alerts
Just In
சீனியர்களுக்காக ஜூனியர்கள் பெற்றுத்தந்த கோப்பை
சென்னை:
ஹேமங் பதானியும், வீரேந்திர சேவக்கும் இணைந்து இந்திய சீனியர் அணிக்கு சாலஞ்சர் கோப்பையை பெற்றுத் தந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சாலஞ்சர் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய ஏ அணி ராகுல் திராவிட்(88 ரன்கள்) மற்றும் ரிஷிகேஷ்கனிட்கரின்(56 ரன்கள்) உதவியுடன் 50 ஓவர்களில் 311 ரன்களை எடுத்தது.
இந்திய சீனியர் அணியின்ர் துவக்கத்தில் மிக விரைவாக 5 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 6வது விக்கெட்டிற்கு ஜோடிசேர்ந்த பதானியும்(104 ரன்கள்) , சேவக்கும்(94ரன்கள்) 168 ரன்களை எடுத்தனர். இதனையடுத்து இந்திய சீனியர் அணி 4 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் சாலஞ்சர் கோப்பையை பெற்றது.
இத்தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக பதானியும், சிறந்த பெளலராக அகர்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 16, 2001, 5:30 [IST]