மும்பையில் போர்க்கப்பல் அணிவகுப்பு .. ஜனாதிபதி பங்கேற்பு
மும்பை:
மும்பையில் நடைபெறும் சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பை சனிக்கிழமையன்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் பார்வையிடுகிறார்.
நட்புணர்வை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி வெளிநாடுகளை சேர்ந்த 25 போர்க்கப்பல்களும், 45 இந்திய போர்க் கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் அணி வகுத்துள்ளன.
ஐ.என்.எஸ். சுகன்யா என்ற ஜனாதிபதிக்கு உரிய கப்பலில் 21 குண்டுகள் முழங்க வரவேற்கப்படும் நாராயணன், பின்னர் அக்கப்பல் மூலம் அணிவகுப்பில்பங்கு பெறும் அனைத்து போர்க் கப்பல்களையும் பார்வையிடுகிறார். மாலையில் நடைபெறும் போர்க் கப்பல்கள் விடைபெறும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதிபங்கேற்கிறார்.
8 வது சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு திருவிழாவான இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான்,இஸ்ரேல், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொராக்கோ, நியூஜிலாந்த், கத்தார், ரஷ்யா, செளதி அரேபியா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.அடுத்த சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.
யு.என்.ஐ.