தி.மு.க.வுடன் இணையுமா த.மா.கா.?
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வுடன், த.மா.கா. இணையுமா என்று பெரும்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க வுடன் இணைந்தது பா.ம.க.
இந்த நிலையில் ஏற்கனவே கொள்கை வேறுபாடுகள் காரணமாக தி.மு.க விலிருந்து விலகிய த.மா.கா. மீண்டும் தி.மு.க வுடன் இணையுமா என்பதில்தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டு வருகிறது. த.மா.கா.வில் தொடர்ந்து கூட்டணி குழப்பம் நிலவி வருகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணிவைத்துக் கொள்வதற்கு த.மா.கா விற்குப் பல முறை அழைப்பு விடுத்தாயிற்று. ஆனால் அவர்கள் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வர முடியாமல்இழுத்தடிக்கிறார்கள்.
த.மா.கா. விலிருந்து நிலையான பதில் இல்லை. எவ்வளவு நாட்கள் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்க முடியும்? இதுகுறித்து வெள்ளிக்கிழமைக்குள்முடிவு செய்யப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.