For Daily Alerts
Just In
பிலிப்பைன்சில் நிலச்சரிவு .. 8 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலாவிலிருந்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில், மன்க்காயோ டவுன் திவாதாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது.இதனால் மன்க்காயோ டவுன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.
திவாதாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆண், பெண் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். அவர்களது சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றுகூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 17, 2001, 5:30 [IST]